AdsforIndians

நெஞ்சம் பதைக்க வைக்க செய்யும் புகார்

Tuesday, May 11, 2010

சமீபத்தில் மனதை மிகவும் பாதித்த நிகழ்வு இது. கடலூர் மாவட்ட ஒரு கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கம் போல் அன்றிறவே முதலிரவு. மறு நாள் அந்த பெண்ணின் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அந்த பெண் தன் உறவினர்களிடம் முறையிட்ட நெஞ்சம் பதைக்க வைக்கசெய்யும் புகார்.

அதாவது தன் முதலிரவில் தான் தனது கணவரின் நண்பர் மூலமாக வீடியோ எடுக்கப்பட்டதாக. பின்னர் அந்த வீடியோ கேசட் வெளிநாட்டு விற்பனைக்காக விமான நிலையம் வரை போய் விட்டதாகவும் அந்த மணப்பெண் தெரிவித்தார். இதை கேள்விப்படும் எந்த தந்தையும் இந்த தந்தை எடுத்த முடிவுதான் எடுப்பார் என்பது உண்மைதான்.

இதில் எந்த அளவு உண்மை என்பது விசாரனையில் இருக்கட்டும். உண்மையாய் இருக்குமேயானால் என்பது பற்றியே இப் பதிவு.

அந்தரங்கம் விற்பனை எங்கு ஆரம்பமாகின்றது? ஒரு உறவினர் மணமகளை முதலிரவுக்கு அனுப்பும் முன்பே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று, அந்த பெண் மறுநாள் தன்னிடமே அவள் அவளுடைய அந்தரங்கத்தை விற்பனை செய்யவேண்டி, 'அறிவுரை' என்ற முதலீட்டை இடுகின்றாள். மறுதினம் "சந்தோஷமா இருந்தியா?" என்ற கொக்கியில் மாட்டி அந்த பெண் தன் அந்தரங்கத்தை இலவசமாக வாரி இறைக்கிறாள்.

மணமகனோ வேறு வழியில். அவனுடைய ஆண்மைதனம் பற்றிய அகங்காரம் அவனுடைய நண்பர்களிடம் பீற்றிக்கொள்ள வைக்கின்றது. இலவச கிலுகிலுப்புகள் கிடைக்கப்பெற்றவர்கள் இன்னும் இன்னும் கொக்கிகளை போட அந்த உளருவாயனோ தனக்கே தெரியாமல் தன் அந்தரங்க விற்பனையை அமோகமாய் நடத்துகிறான்.

அந்த இருவருக்குமே சொல்வதுயாதெனில் நீங்கள் விற்பனை செய்வது உங்களுக்கு மட்டுமேயானது அல்ல. உங்களை தவிர மறைமுகமாக வேறு சிலரின் மானம் சம்பந்தப்பட்டதும் உள்ளடங்கியிருக்கிறது என்பதை உணருங்கள்.

விலைமாதுவிடம் சென்று வந்தவன் கூட அவன் லீலைகளை, அகங்கார ஆண்மைதனத்தை அடுத்தவனிடம் சிலாகித்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவள் அவனிடம் மட்டுமே தன் மானத்தை விற்க ஊதியம் பெற்றாலொழிய இவன் வெளியே வந்து மற்றவர்களிடம் அவள் மானத்தை(மிச்சமிருப்பதை)விற்க எந்த விற்பனை உரிமையும் தரவில்லை. அப்படியிருக்கும் போது புதுமண தம்பதிகளின் இந் நடத்தை, கலாச்சார சீர்கேடு என்ற புற்று நோயின் ஆரம்ப விழாவிற்கான அழைப்பிதழே.

கிலுகிலுப்பு கிடைக்கப்பெற்றவர்கள் எப்படி வலை விரித்தாலும் உங்களுக்கு எங்கே போகிறது புத்தி?

இந்த வாய் வழி விற்பனையே வளர்ந்து ஊடகத்துறை என்றெல்லாம் கடந்து இதோ இந்த பதிவின் ஆரம்பத்தில் கண்ட கடலூர் மாவட்ட நிகழ்வெல்லாம் நடைபெறுகின்றன.

உணருங்கள் - அந்தரங்கம் புனிதமானது

0 comments:

Post a Comment

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP